ராணுவம் பேசாது; வீரத்தை காட்டும்: பிரதமர் மோடி புகழாரம்

போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் போர் நினைவிடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, ‘ராணுவம் பேசாது; வீரத்தை செயலில் காட்டும்’ என்று புகழ்ந்து பேசியதுடன், ‘தேசம், எல்லைகளை கடந்த பல மனித உயிர்களை காப்பாற்றியவர்கள் நமது ராணுவ வீரர்கள்’ என பாராட்டினார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில், போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கான நினைவிடம் 41 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இதில் முன்னாள் ராணுவத்தினர் பலர் கலந்து கொண்டனர். சமீபத்தில், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரம் கேட்டு எதிர்க்கட்சிகள் சந்தேகத்தை கிளப்பின. அதற்கு பதிலடி தரும் வகையில் பிரதமர் மோடி, தனது பேச்சை தொடங்கினார். அவர், பேசியதாவது: நமது ராணுவம் எப்போதும் பேசுவதில்லை. தனது வீரத்தை செயலில் தான் காட்டுகிறது. அதைத்தான் நமது பாதுகாப்பு அமைச்சரும் செய்கிறார். நாம், ராணுவ வீரர்களைப் பற்றி பேசும் போது, அவர்களின் சீருடை, வீரத்தை பற்றிதான் பெரும்பாலும் குறிப்பிடுகிறோம். அதையும் தாண்டி, மனிதநேயத்தின் உதாரணமாக அவர்களை நாம் பார்க்க வேண்டும்.

ஐநா அமைதிப்படையில் மிகப்பெரும் பங்களிப்பை அளித்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நமது ராணுவம், எல்லை, தேசத்தை தாண்டி பல மனித உயிர்களை காப்பாற்றி உள்ளது. ஏமன் உள்நாட்டு போரில், பொதுமக்களை மீட்பதில் ராணுவம் முக்கிய பங்காற்றியது. அப்போது இந்தியர்களை மட்டுமின்றி சில பாகிஸ்தான் மக்களைக் கூட நமது ராணுவம் காப்பாற்றி வந்துள்ளது. காஷ்மீர், உத்தரகாண்ட் வெள்ளத்தின் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ராணுவம் ஈடுபட்டு பல உயிர்களை காப்பாற்றியது. காஷ்மீரில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த நமது ராணுவத்தினர், அங்குள்ள சில மக்கள் நம் மீது கல்வீசியவர்களாயிற்றே என ஒருபோதும் நினைக்காமல் பலரை காப்பாற்றி உள்ளனர். இப்படி, எல்லையை காப்பது மட்டுமின்றி பேரிடர் சமயத்திலும் அவர்கள் நம் உயிரை காப்பாற்றியுள்ளனர் ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி, ஒரே பென்ஷன் திட்டத்தில், முந்தைய அரசுகள் பொய்யான பல வாக்குறுதிகளை அளித்தன. ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. ராணுவ வீரர்களின் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக இந்த அரசு பெருமை கொள்கிறது.

எல்லையில் உயிரை பணயம் வைத்து, இரவு பகலாக அவர்கள் பாதுகாப்பதால் தான் நம்மால் இங்கு இரவில் நிம்மதியாக உறங்க முடிகிறது. சில நாடுகளில் ராணுவ வீரர்களை விமான நிலையத்திலோ, ரயில் நிலையத்திலோ பார்க்கும் போது, மக்கள் எழுந்து நின்று, கைதட்டி அவர்களுக்கு மரியாதை செய்கின்றனர். அதை நாமும் கடைபிடிப்போம்.இவ்வாறு மோடி பேசினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...