கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்ற கோவை எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவிகளான, அபிநயா மற்றும் அவரது சகோதரி 8-ம் வகுப்பு பயிலும் கல்யாணி ஆகிய இருவரும் சேர்ந்து டெங்கு விழிப்புணர்வு தொடர்பான பாடல் வரிகளை எழுதி, இசையமைத்து, பாடலையும் பாடிய முதல் குறுந்தகடினை கோவை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.விஜயகார்த்திகேயன் அவர்கள் வெளியிட்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளில் கொசு புகை வண்டி மூலம் புகையடித்தல், கொசு மருந்து தெளித்தல், மாநகராட்சி ஊழியர்கள் மூலம் வீடு வீடாக சென்று மழைநீர் தேங்கிக்கிடக்கும் குப்பை கழிவுகளில் அகற்றுதல், பள்ளி, கல்லூரி மற்றும் நர்சிங் மாணவர்கள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலமும் டெங்கு தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இன்று கோவை எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளான 10-ம் வகுப்பு பயிலும் அபிநயா மற்றும் அவரது சகோதரி 8-ம் வகுப்பு பயிலும் கல்யாணி ஆகிய இருவரும் சேர்ந்து டெங்கு விழிப்புணர்வு தொடர்பான பாடல் வரிகளை எழுதி, இசையமைத்து, பாடலையும் பாடிய முதல் குறுந்தகடினை கோவை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்கள் வெளியிட்டார். மாநகராட்சி கல்வி அலுவலர் மூலம் மாநகராட்சி மற்றும் அனைத்து பள்ளிகளுக்கும் டெங்கு விழிப்புணர்வு பிரச்சார குறுந்தகடுகளை வழங்கிட மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.விஜயகார்த்திகேயன் அவர்கள் அறிவுறுத்தினார்.
உடன் துணை ஆணையாளர் காந்திமதி, மாநகராட்சி நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் செல்வராஜ், முதல்வர் கீதா கோபிநாத், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த செல்வகுமார், ரவிச்சந்திரன் ஆகியோர் இருந்தனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளில் கொசு புகை வண்டி மூலம் புகையடித்தல், கொசு மருந்து தெளித்தல், மாநகராட்சி ஊழியர்கள் மூலம் வீடு வீடாக சென்று மழைநீர் தேங்கிக்கிடக்கும் குப்பை கழிவுகளில் அகற்றுதல், பள்ளி, கல்லூரி மற்றும் நர்சிங் மாணவர்கள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலமும் டெங்கு தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இன்று கோவை எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளான 10-ம் வகுப்பு பயிலும் அபிநயா மற்றும் அவரது சகோதரி 8-ம் வகுப்பு பயிலும் கல்யாணி ஆகிய இருவரும் சேர்ந்து டெங்கு விழிப்புணர்வு தொடர்பான பாடல் வரிகளை எழுதி, இசையமைத்து, பாடலையும் பாடிய முதல் குறுந்தகடினை கோவை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்கள் வெளியிட்டார். மாநகராட்சி கல்வி அலுவலர் மூலம் மாநகராட்சி மற்றும் அனைத்து பள்ளிகளுக்கும் டெங்கு விழிப்புணர்வு பிரச்சார குறுந்தகடுகளை வழங்கிட மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.விஜயகார்த்திகேயன் அவர்கள் அறிவுறுத்தினார்.
உடன் துணை ஆணையாளர் காந்திமதி, மாநகராட்சி நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் செல்வராஜ், முதல்வர் கீதா கோபிநாத், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த செல்வகுமார், ரவிச்சந்திரன் ஆகியோர் இருந்தனர்.