பள்ளி மாணவிகள் எழுதி, இசையமைத்த டெங்கு விழிப்புணர்வு தொடர்பான பாடல் குறுந்தகடு வெளியீடு

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்ற கோவை எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவிகளான, அபிநயா மற்றும் அவரது சகோதரி 8-ம் வகுப்பு பயிலும் கல்யாணி ஆகிய இருவரும் சேர்ந்து டெங்கு விழிப்புணர்வு தொடர்பான  பாடல் வரிகளை எழுதி, இசையமைத்து, பாடலையும் பாடிய முதல் குறுந்தகடினை கோவை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.விஜயகார்த்திகேயன் அவர்கள் வெளியிட்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளில் கொசு புகை வண்டி மூலம் புகையடித்தல், கொசு மருந்து தெளித்தல், மாநகராட்சி ஊழியர்கள் மூலம் வீடு வீடாக சென்று மழைநீர் தேங்கிக்கிடக்கும் குப்பை கழிவுகளில் அகற்றுதல், பள்ளி, கல்லூரி மற்றும் நர்சிங் மாணவர்கள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலமும் டெங்கு தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இன்று கோவை  எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளான 10-ம் வகுப்பு பயிலும் அபிநயா மற்றும் அவரது சகோதரி 8-ம் வகுப்பு பயிலும் கல்யாணி ஆகிய இருவரும் சேர்ந்து டெங்கு விழிப்புணர்வு தொடர்பான  பாடல் வரிகளை எழுதி, இசையமைத்து, பாடலையும் பாடிய முதல் குறுந்தகடினை கோவை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்கள் வெளியிட்டார். மாநகராட்சி கல்வி அலுவலர் மூலம் மாநகராட்சி மற்றும் அனைத்து  பள்ளிகளுக்கும் டெங்கு விழிப்புணர்வு பிரச்சார குறுந்தகடுகளை வழங்கிட மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.விஜயகார்த்திகேயன் அவர்கள் அறிவுறுத்தினார். 

உடன் துணை ஆணையாளர் காந்திமதி, மாநகராட்சி நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி  தாளாளர் செல்வராஜ்,  முதல்வர் கீதா கோபிநாத், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த செல்வகுமார், ரவிச்சந்திரன் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...