கூலிப்படை ஏவி கொலை செய்யப்படுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் வேலையில் பகையுணர்வோடு கூலிப்படை ஏவி கொலை செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்திரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை விமான நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வேண்டுமென்றே குற்றவாளியின் கைது நடவடிக்கையை காவல்துறை தாமதப்படுத்துகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் மேலும், தமிழகத்தில் இந்து நிர்வாகிகள் கொலை செய்யப்படுவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் கண்காணிக்கபட வேண்டும் என்றும், புதிதாக பொருப்பேற்றுள்ள ஒ.பன்னீர் செல்வம் சுணக்கம் இன்றி செயல்பட  வேண்டும் எனவும், தமிழகத்தில் சட்டம் ஒழங்கு எவ்வாறு உள்ளது என கண்காணிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், முதலமைச்சரின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்புவது தவறானது என்றும், உண்மையிலேயே தவறாக பேசினார்களா என்பது குறித்து காவல்துறையினர் ஆராய்ந்து கைது செய்ய வேண்டும் எனவும், மது அருந்திவிட்டு லாரி ஓட்டியதால் மூன்று கல்லூரி மாணவிகள் இறந்த சம்பவத்தை அடுத்தாவது தமிழகத்தில் உடனடியாக டாஸ்மாக்கை கட்டுப்படுத்துவதோடு, குடித்து விட்டு வாகன ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார். உள்ளாட்சி தேர்தல் நெறுங்கி வரும் வேலையில் பகையுணர்வோடு கூலிப்படை ஏவி கொலை செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...