என்எஸ்ஜி குரூப், மசூத் அசார் விவகாரம் சீனாவின் நிலையில் மாற்றம் இல்லை: வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு

என்எஸ்ஜி குழுவில் இந்தியா சேர எதிர்ப்பு தெரிவித்ததற்கும், மசூத் அசாரை ஐநாவால் தடை செய்யப்பட்ட தீவிரவாதி என அறிவிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்த சீனாவின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று இந்தியா வர உள்ளார். இந்த சூழ்நிலையில் அணுசப்ளை செய்யும் குழுவில் இந்தியா சேர எதிர்ப்பு தெரிவித்தது, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்க தலைவர் மசூத் அசாரை ஐநாவால் அங்கீரிக்கப்பட்ட தீவிரவாதி என்ற அறிவிப்பை வெளியிட முயற்சி செய்த இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தது போன்ற சீனாவின் நிலையில் மாற்றம் உண்டா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜெங் ஜங் பதில் அளித்து கூறியதாவது:இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவு மிகவும் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

அதேசமயம் அணுசப்ளை செய்யும் குழுவில் இந்தியாவை சேர்ப்பது, மசூத் அசாருக்கு தடை விதிப்பது போன்ற விவகாரங்களில் சீனாவின் நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை. நான் சீனாவின் நிலையைப்பற்றித்தான் எடுத்துக்கூறமுடியும். இருப்பினும் எதிர்காலத்தில் இருநாட்டு பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா-பாகிஸ்தான் இடையிலே பொருளாதார மண்டலம் அமைப்பது குறித்து இருநாடுகள் இடையேயும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...