முதல்வர் உடல்நலம் பற்றி பேசிய வழக்கில்- மக்கள் சிவில் உரிமை மனு

முதல்வர் உடல்நலம் பற்றி பேசியதாக கோவையில் சமீபத்தில் இரு வங்கி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களின் தனிமனித சுதந்திரத்தை, கருத்துரிமையை பாதிக்கும் என மக்கள் சிவில் உரிமை கழகம் மற்றும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

முதல்வர் உடல்நலம் பற்றி அவதூறு பேசியதாக கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த இரு வங்கி உழியர்களான சுரேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோரை நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுதொடர்பாக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த கைது நடவடிக்கை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

பின்னர், மக்கள் சிவில் உரிமை கழக தேசிய குழு உறுப்பினர் பாலமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; ஆளும் கட்சியை திருப்திபடுத்தும் நோக்கில் காவல் துறையினர் செயல்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுவதாகவும், இருவர் பேசியதற்காக கைது செய்யப்படுவது என்பது தனிமனித சுதந்திரத்தை, கருத்துரிமையை பாதிக்கும் செயல் எனவும், இந்த இருவர் கைது சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் உரிய விசாரணை மேற்கொண்டு இருவரையும் விடுவிக்க வேண்டும் எனவும் பாலமுருகன் வலியுறுத்தினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...