சமூக ஆர்வலர் சிவா 6 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது
கோவையை சேர்ந்தவர் சிவா. சமூக ஆர்வலர். இவர் மீது அலந்துரையை சேர்ந்த மகேஷ்வரி என்ற பெண் போலீரிடம் புகார் அளித்தார். அந்த புகாரில் சிவா தன்னிடம் பட்டா வாங்கித்தருவதாக மோசடியில் ஈடுபட்டதாகவும், தன்னை பொது இடத்தில் அவமானப்படுத்தியதாகவும் ஒரு புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து சிவா மீது ஆலந்துரை போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
சமூக ஆர்வலர் சிவா, அவ்வப்போது ஈஷா யோக மையத்தை சாடி பல புகார்களை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துவந்தார். மேலும், ஈசா ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளாக கூறப்படும் , வெள்ளிங்கிரி அடிவாரப்பகுதிகளில் உள்ள மக்களை திரட்டி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் , அவர் மீது ஈஷாவில் பணிபுரியும் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
கோவையை சேர்ந்தவர் சிவா. சமூக ஆர்வலர். இவர் மீது அலந்துரையை சேர்ந்த மகேஷ்வரி என்ற பெண் போலீரிடம் புகார் அளித்தார். அந்த புகாரில் சிவா தன்னிடம் பட்டா வாங்கித்தருவதாக மோசடியில் ஈடுபட்டதாகவும், தன்னை பொது இடத்தில் அவமானப்படுத்தியதாகவும் ஒரு புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து சிவா மீது ஆலந்துரை போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
சமூக ஆர்வலர் சிவா, அவ்வப்போது ஈஷா யோக மையத்தை சாடி பல புகார்களை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துவந்தார். மேலும், ஈசா ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளாக கூறப்படும் , வெள்ளிங்கிரி அடிவாரப்பகுதிகளில் உள்ள மக்களை திரட்டி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் , அவர் மீது ஈஷாவில் பணிபுரியும் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது