சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.1.34 காசுகளும், டீசல் விலையில் ரூ.2.37 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. விலை உயர்வையடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.66க்கும், டீசல் ரூ.57க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலை உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமாகா கட்சியின் தலைவர் ஜி.கே..வாசன் வலியுறுத்தியுள்ளார். இனிவரும் காலங்களில் பெட்ரோல், டீல் விலையை நிர்ணயம் செய்யக்கூடிய கொள்கை முடிவை மத்திய அரசே எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமாகா கட்சியின் தலைவர் ஜி.கே..வாசன் வலியுறுத்தியுள்ளார். இனிவரும் காலங்களில் பெட்ரோல், டீல் விலையை நிர்ணயம் செய்யக்கூடிய கொள்கை முடிவை மத்திய அரசே எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.