உலக உணவு தினமான இன்று கோவை, உக்கடம் பகுதியில் உள்ள சுகாதாரத்துறை அலுவலகத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனமான ய்நோ புட் வேஸ்ட் அமைப்பு, உணவு விழா ஒன்றை நடத்தியது. இதில் கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து உணவு குறித்த பாடலை அவர் வெளியிட்டார்.
பின்னர் அவர் பேசுகையில்:-

கோவையில் பல்வேறு தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் சேவை செய்துவருகின்றனர். ஒவ்வொரு அமைப்பினரும் மக்களுக்கு ஒவ்வொரு வகையில் உதவி வருகின்றனர். கோவையில் வேலை செய்வது எனக்கு பெருமையாக உள்ளது. தொடர்ந்து இது போன்ற சேவைகளை அனைவரும் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
