நஷ்ரா: ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. காஷ்மீர் மாநிலம் நஷ்ரா பகுதியில் பாகிஸ்தான் படைகள் இந்திய எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இந்திய தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய வீரர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.