காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து நாளை ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றன.
ரெயில் மறியல் காரணமாக பயணிகளுக்கு எந்த இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் ரெயில்வே போலீசாரும், மாநில சட்டம்-ஒழுங்கு போலீசாரும் கவனமுடன் உள்ளனர். இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ரெயில் நிலையத்துக்கு வரும் அரசியல் கட்சியினரை நுழைவு வாயிலிலேயே வைத்து கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் கட்சியினரோ, ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு ரெயில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ரெயில் மறியல் காரணமாக பயணிகளுக்கு எந்த இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் ரெயில்வே போலீசாரும், மாநில சட்டம்-ஒழுங்கு போலீசாரும் கவனமுடன் உள்ளனர். இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ரெயில் நிலையத்துக்கு வரும் அரசியல் கட்சியினரை நுழைவு வாயிலிலேயே வைத்து கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் கட்சியினரோ, ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு ரெயில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்ய திட்டமிட்டுள்ளனர்.