தீபாவளிக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இதுவரை பட்டாசு கடை வைக்க மாவட்ட நிர்வாகம் தற்காலி உரிமம் வழங்காத்தால் பட்டாசு கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பட்டாசு வியாபாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் சங்கத்தின் கூட்டம் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக பேசிய அச்சங்கத்தின் பொது செயலாளர், தீபாவளியை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசு விற்பனைகள் நடைபெறும் , இதுபோன்று பட்டாசு விற்னை செய்யும் கடைகளுக்கு 30 நாட்களுக்கு முன்பாகவே தற்காலிக உரிமம் வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தீபாவளிக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையிலும் பட்டாசு கடை வைக்க மாவட்ட நிர்வாகம் தற்காலிக உரிமம் வழங்காமல் தாமதித்து வருவதாக குற்றம்சாட்டினார். இதானல் பட்டாசு கொள்முதல் செய்து சுமூகமாக வியாபாரம் செய்வதில் சிக்கல் ஏற்படுவதாக தெரிவித்தவர், உடனடியாக மாவட்ட நிர்வாகம் தற்காலிக உரிமம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்தார். மேலும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க வணிக வரித்துறையினர் நெருக்கடி இன்றி எளிய முறையில் வணிக வரி உரிமம் கிடைகக் வழி செய்ய வேண்டும் எனவும் சீன பட்டாசுகளை தவிர்த்து தரமான பட்டாசுகளை பாதுகாப்பான முறையில் விற்பனை செய்யவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இந்த கோரிக்கைகள் தொடர்பாக நாளை மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளனர்.
கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் சங்கத்தின் கூட்டம் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக பேசிய அச்சங்கத்தின் பொது செயலாளர், தீபாவளியை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசு விற்பனைகள் நடைபெறும் , இதுபோன்று பட்டாசு விற்னை செய்யும் கடைகளுக்கு 30 நாட்களுக்கு முன்பாகவே தற்காலிக உரிமம் வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தீபாவளிக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையிலும் பட்டாசு கடை வைக்க மாவட்ட நிர்வாகம் தற்காலிக உரிமம் வழங்காமல் தாமதித்து வருவதாக குற்றம்சாட்டினார். இதானல் பட்டாசு கொள்முதல் செய்து சுமூகமாக வியாபாரம் செய்வதில் சிக்கல் ஏற்படுவதாக தெரிவித்தவர், உடனடியாக மாவட்ட நிர்வாகம் தற்காலிக உரிமம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்தார். மேலும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க வணிக வரித்துறையினர் நெருக்கடி இன்றி எளிய முறையில் வணிக வரி உரிமம் கிடைகக் வழி செய்ய வேண்டும் எனவும் சீன பட்டாசுகளை தவிர்த்து தரமான பட்டாசுகளை பாதுகாப்பான முறையில் விற்பனை செய்யவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இந்த கோரிக்கைகள் தொடர்பாக நாளை மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளனர்.