நான் அதிபராக தேர்வானால் இந்தியாவுடன் நெருங்கிய நட்பு

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள எடிசன் நகரில், குடியரசு கட்சியின் இந்து கூட்டணி ஏற்பாடு செய்த தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொண்டு பேசியதாவது: உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அதனால் அது அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக உள்ளது. நான் அதிபர் ஆனால், அமெரிக்காவும், இந்தியாவும் மிகச் சிறந்த நட்பு நாடுகளாக இருக்கும். இந்தியாவுடன் பல விதமான வர்த்தகத்தில் ஈடுபடவுள்ளோம். இதனால் இரு நாடுகளுக்கும் நல்ல எதிர்காலம் ஏற்படும்.

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை  பிரதமர் மோடி தொடர்ந்து மேற்கொண்டு வருவதால், இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. உங்கள் பிரதமர், இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதரவான தலைவர். அவர் வரிமுறையை எளிமை படுத்தியுள்ளார். வரியை குறைத்துள்ளார். பொருளாதாரம் ஆண்டுக்கு 7 சதவீத அளவில் வலுவாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இது மிகப் சிறப்பானது. ஆனால் அமெரிக்காவில் நமது பொருளாதாரம் வளர்ச்சியடையவே இல்லை. ஜீரோவாக உள்ளது. ஆட்சி அதிகாரத்திலும் பிரதமர் மோடி நல்ல சீர்திருத்தம் கொண்டு வந்துள்ளார். இது அமெரிக்காவுக்கும் தேவை. அவருடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். மிகச் சிறந்த மனிதரான மோடியை, நான் பாராட்டுகிறேன்.

நான் இந்தியா மற்றும் இந்து மதத்தின் மிகச்சிறந்த ரசிகன். இந்துக்களும், இந்தியர்களும் அமெரிக்காவை வலுப்படுத்தினர். இங்குள்ள இந்திய சமூகத்தினர் பலர் தொழிலதிபர்களாக இருப்பது மிகவும் என்னை கவர்ந்துள்ளது. நான் அதிபரானால், இந்தியர்கள் மற்றும் இந்து சமூகத்தினருக்கு வெள்ளை மாளிகையுடன் நல்ல நட்பு ஏற்படும். இந்தியாவுடனான தூதரக மற்றும் ராணுவ ஒத்துழைப்பு இன்னும் வலுப்பட வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு ட்ரம்ப் பேசினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...