முதல்வர் உடல்நலம் குறித்து அவதூறு: பொள்ளாச்சியில் திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு

பொள்ளாச்சி திமுக நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்ட 20 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக பொள்ளாச்சி நகர்மன்ற 8-ஆவது வார்டு திமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 20 பேர் மீது கவைத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். திமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், திமுக இளைஞரணியிலும் முக்கியப் பொறுப்பில் உள்ளார். 

நவநீதகிருஷ்ணன், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து கடந்த 13-ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் அவதூறு பரப்பும் விதமாக கவிதையைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கவிதையை ராஜீவ் காந்தி என்பவர் உள்ளிட்ட 20 பேர் பகிர்ந்துள்ளனர். இதுகுறித்து மகாலிங்கபுரம் காவல் துறையினரிடம் பொள்ளாச்சி நகர்மன்றத் தலைவரும், அதிமுக நகரச் செயலாளருமான கிருஷ்ணகுமார் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில், நவநீதகிருஷ்ணன், ராஜீவ் காந்தி உள்ளிட்ட 20 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...