காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காங்கிரஸ், தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் இன்று காலை கோவை ரயில் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகரில் மத்திய ரயில் நிலையம் மற்றும் வடகோவை ரயில் நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 594 பேர் கைது. இதில் 45 பேர் பெண்கள் ஆவர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் கூறியதாவது :-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், அதற்கு உரிமை இல்லை என்று மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல். மோடி அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தமிழகத்திக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 400க்கும் மேற்பட்டோரை காவல்துறையினரை கைது செய்தனர்.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் கூறியதாவது :-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், அதற்கு உரிமை இல்லை என்று மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல். மோடி அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தமிழகத்திக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 400க்கும் மேற்பட்டோரை காவல்துறையினரை கைது செய்தனர்.
