கோவை மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழக்கக் கோரி அப்பணியாளர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, அவர்களுடன் வந்த தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கத்தின் மாநில ஆலோசகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் 2500க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 6 முதல் 8 வருடம் பணியாற்றி வரும் இவர்களுக்கு மாத ஊதியமாக 6000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. மருத்துவக் காப்பீடு உள்ளிட்டு வேறு எவ்வித சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. கடந்த வருடம் இவர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.1000 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதுவும் தீபாவளி முடிந்து பின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான தீபாவளி போனஸ் குறித்து இன்னும் பேசப்படவில்லை. எனவே, ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு இந்த வருடம் இரண்டு மாத ஊதியம் போனஸாக வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என்றார்.
இதனிடையே, ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் திடீரென திரண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, அவர்களுடன் வந்த தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கத்தின் மாநில ஆலோசகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் 2500க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 6 முதல் 8 வருடம் பணியாற்றி வரும் இவர்களுக்கு மாத ஊதியமாக 6000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. மருத்துவக் காப்பீடு உள்ளிட்டு வேறு எவ்வித சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. கடந்த வருடம் இவர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.1000 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதுவும் தீபாவளி முடிந்து பின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான தீபாவளி போனஸ் குறித்து இன்னும் பேசப்படவில்லை. எனவே, ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு இந்த வருடம் இரண்டு மாத ஊதியம் போனஸாக வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என்றார்.
இதனிடையே, ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் திடீரென திரண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.