போனஸ் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்த துப்புரவு தொழிலாளர்கள்

கோவை மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழக்கக் கோரி அப்பணியாளர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

இதைத்தொடர்ந்து, அவர்களுடன் வந்த தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கத்தின் மாநில ஆலோசகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் 2500க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 6 முதல் 8 வருடம் பணியாற்றி வரும் இவர்களுக்கு மாத ஊதியமாக 6000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. மருத்துவக் காப்பீடு உள்ளிட்டு வேறு எவ்வித சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. கடந்த வருடம் இவர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.1000 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதுவும் தீபாவளி முடிந்து பின் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த வருடத்திற்கான தீபாவளி போனஸ் குறித்து இன்னும் பேசப்படவில்லை. எனவே, ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு இந்த வருடம் இரண்டு மாத ஊதியம் போனஸாக வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என்றார். 

இதனிடையே, ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் திடீரென திரண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...