பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ராணுவம் நாளை விளக்கம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் (சர்ஜிகல் அட்டாக்) நடத்தியது குறித்து, நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் வெளியுறவுத் துறைச் செயலரும், இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரலும் வரும் 18-ஆம் தேதி விளக்கம் அளிக்கவுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரியில் உள்ள இந்திய ராணுவ படைப்பிரிவு முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 18-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 19 இந்திய வீரர்கள் பலியாகினர். இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அதே மாதம் 29-ஆம் தேதி புகுந்து இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலில் பயங்கரவாதிகள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

எனினும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்று அந்நாட்டு ராணுவம் மறுத்து வருகிறது. இதேபோல், இந்தியாவில் உள்ள சில அரசியல் கட்சிகளும் சந்தேகம் எழுப்பின. குறிப்பாக, தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், துல்லியத் தாக்குதல் தொடர்பான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்றார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை தரகு வேலை செய்வதாக புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, பாஜக எம்.பி. பி.சி. கந்தூரி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழுவிடம் ராணுவ துணைத் தளபதி பிபின் ராவத் ஆஜராகி, துல்லியத் தாக்குதல் குறித்து விளக்கினார்.

இந்நிலையில், தில்லியில் வரும் 18-ஆம் தேதி கூடவிருக்கும் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன்னிலையில், வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும், ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரலும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளனர்.
இதுகுறித்து மக்களவைச் செயலர் வெளியிட்ட அறிக்கையில், "தில்லியில் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் கூட்டம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைமையில் வரும் 18-ஆம் தேதி கூடுகிறது. இதில் வெளியுறவுத் துறைச் செயலர், மத்திய உள்துறைச் செயலர், ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல் ஆகியோர் நேரில் ஆஜராகி, துல்லியத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் உறவு குறித்து விளக்கம் அளிக்கவுள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...