தூய்மை இந்தியா, தூய்மை வித்யாலயா-வின் சுகாதாரமாக வாழ்வது குறித்தான
விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்
ஒரு பகுதியாக கோவை ரத்தினபுரியில் அமைந்துள்ள மாநகராட்சிப் பள்ளியில்
நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடையே சுத்தம் குறித்தான விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டது. இதனை கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்திகேயன் துவக்கி
வைத்தார்.

தூய்மை இந்தியா, தூய்மை வித்யாலயா அறக்கட்டளை, கோவை ரோட்டரி கிளப், ஏஆர்சி பவுண்டேஸன் ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், ஏஆர்சி பவுண்டேஸனின் சார்பில் அதன் உறுப்பினர்கள் மைம்ஸ் (அமைதியான) முறையில் சுகாதாரம் தொடர்பான நாடகம் நடத்தி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதனைத்தொடர்ந்து விஜயகார்த்திகேயன் பேசியதாவது:-
சுத்தம், சுகாதாரத்தின் அடிப்படை மாணவர்களிடம் இருந்து தொடங்க வேண்டும். சாப்பிடும் முன் கையினை சுத்தம் செய்வது, சுற்றுப்புரத்தை சுத்தமானதாக வைத்துக்கொள்வது போன்றவற்றை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்றார்.

தூய்மை இந்தியா, தூய்மை வித்யாலயா-வின் கோவை மாவட்ட தலைவர் திருமாள் பேசியதாவது:-
திறந்த வெளி கழிப்பிடத்தினை தவிர்க்க வேண்டும். நமது சுற்றுப்புரத்தை நாம் தான் பாதுகாப்பாக வைக்க வேண்டும். எங்கு நாம் இருக்கிறோமோ அங்கு சுகாதாரம் இருக்க வேண்டும். அடிப்படை சுகாதாரம் மாணவர்களிடையே இருப்பது அவசியம், மற்றவர்களுக்கும் இதுகுறித்து மாணவர்கள் தான் எடுத்துரைக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சி 82 மாநகாட்சிப் பள்ளிகளில் நடத்தப்பட உள்ளதாக அவ்வமைப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.




தூய்மை இந்தியா, தூய்மை வித்யாலயா அறக்கட்டளை, கோவை ரோட்டரி கிளப், ஏஆர்சி பவுண்டேஸன் ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், ஏஆர்சி பவுண்டேஸனின் சார்பில் அதன் உறுப்பினர்கள் மைம்ஸ் (அமைதியான) முறையில் சுகாதாரம் தொடர்பான நாடகம் நடத்தி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதனைத்தொடர்ந்து விஜயகார்த்திகேயன் பேசியதாவது:-
சுத்தம், சுகாதாரத்தின் அடிப்படை மாணவர்களிடம் இருந்து தொடங்க வேண்டும். சாப்பிடும் முன் கையினை சுத்தம் செய்வது, சுற்றுப்புரத்தை சுத்தமானதாக வைத்துக்கொள்வது போன்றவற்றை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்றார்.

தூய்மை இந்தியா, தூய்மை வித்யாலயா-வின் கோவை மாவட்ட தலைவர் திருமாள் பேசியதாவது:-
திறந்த வெளி கழிப்பிடத்தினை தவிர்க்க வேண்டும். நமது சுற்றுப்புரத்தை நாம் தான் பாதுகாப்பாக வைக்க வேண்டும். எங்கு நாம் இருக்கிறோமோ அங்கு சுகாதாரம் இருக்க வேண்டும். அடிப்படை சுகாதாரம் மாணவர்களிடையே இருப்பது அவசியம், மற்றவர்களுக்கும் இதுகுறித்து மாணவர்கள் தான் எடுத்துரைக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சி 82 மாநகாட்சிப் பள்ளிகளில் நடத்தப்பட உள்ளதாக அவ்வமைப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.


