மாநகராட்சிப் பள்ளியில் தூய்மை இந்தியா திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூய்மை இந்தியா, தூய்மை வித்யாலயா-வின் சுகாதாரமாக வாழ்வது குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை ரத்தினபுரியில் அமைந்துள்ள மாநகராட்சிப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடையே சுத்தம் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்திகேயன் துவக்கி வைத்தார்.



தூய்மை இந்தியா, தூய்மை வித்யாலயா அறக்கட்டளை, கோவை ரோட்டரி கிளப், ஏஆர்சி பவுண்டேஸன் ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், ஏஆர்சி பவுண்டேஸனின் சார்பில் அதன் உறுப்பினர்கள் மைம்ஸ் (அமைதியான) முறையில் சுகாதாரம் தொடர்பான நாடகம் நடத்தி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இதனைத்தொடர்ந்து விஜயகார்த்திகேயன் பேசியதாவது:-

சுத்தம், சுகாதாரத்தின் அடிப்படை மாணவர்களிடம் இருந்து தொடங்க வேண்டும். சாப்பிடும் முன் கையினை சுத்தம் செய்வது, சுற்றுப்புரத்தை சுத்தமானதாக வைத்துக்கொள்வது போன்றவற்றை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்றார்.



தூய்மை இந்தியா, தூய்மை வித்யாலயா-வின் கோவை மாவட்ட தலைவர் திருமாள் பேசியதாவது:-

திறந்த வெளி கழிப்பிடத்தினை தவிர்க்க வேண்டும். நமது சுற்றுப்புரத்தை நாம் தான் பாதுகாப்பாக வைக்க வேண்டும். எங்கு நாம் இருக்கிறோமோ அங்கு சுகாதாரம் இருக்க வேண்டும். அடிப்படை சுகாதாரம் மாணவர்களிடையே இருப்பது அவசியம், மற்றவர்களுக்கும் இதுகுறித்து மாணவர்கள் தான் எடுத்துரைக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சி 82 மாநகாட்சிப் பள்ளிகளில் நடத்தப்பட உள்ளதாக அவ்வமைப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.







Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...