கோவை மாநகர காவல்துறை மற்றும் ஜெம் மருத்துவமனை இணைந்து பழங்குடி கிராமத்தில் உள்ள மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்தனர். பழங்குடி மக்களுக்காக கிராமிய மருத்துவ குழு என்ற இலவச மருத்துவ முகாம் பல்வேறு கிராமங்களில் கோவை மாநகர காவல்துறை மற்றும் ஜெம் மருத்துவமனை இணைந்து நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக அரைக்கடவு, நல்லூர்பதி மற்றும் கோபன்னாரி ஆகிய கிராமத்தில் உள்ள பழங்குடி மக்களுக்கு ஜெம் மருத்துவமனையின் மருத்துவர் மோகன்ராஜ் மற்றும் மருத்துவர் சுஜாதா ஆகியோர் பழங்குடியின மக்களுக்கு இலவச பரிசோதனை மேற்கொண்டனர். இம்முகாம் கிராமத்தில் உள்ள குழந்தைகள் உட்பட 200 பேருக்கு இந்த முகாம் பயனுள்ளதாக அமைந்தது.

சமூக காரணமாக மருத்துவர்கள் அர்ப்பணிக்கும் இந்தப்பணிக்கு கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறையினர் நன்றி தெரிவித்தனர். மேலும் கிராமத்தில் உள்ள பழங்குடி கிராம மக்களுக்கு புதிய கருத்துக்கள் மற்றும் முயற்சிகள் போன்றவை ஊக்குவிக்கப்படும் என கோவை மாநகர காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி தெரிவித்தார்.
