65 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட பர்கர் தயாரித்து ஏ.ஜே.கே கல்லூரி சாதனை!

நவாக்கரையில் உள்ள ஏ.ஜே.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறை சார்பில் மாணவர்கள் இணைந்து 65 கிலோ எடையுள்ள மிகப்பெரிய இந்திய காய்கறி பர்கர் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.

இதனை தயாரிப்பதற்கு 35 கிலோ மைதா, 1.750 கிலோ சக்கரை, 700 கிராம் உப்பு, 1050 கிராம் ஈஸ்ட், 21 லிட்டர் தண்ணீர் மற்றும் 1.750 மில்லி லிட்டர் தாவர எண்ணெய் போன்ற பொருட்கள் உபயோகப்படுத்தபட்டது. இது 1 அடி 16 அங்குல உயரம் மற்றும் 3 அடி அகலம் கொண்டது. சமையல் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து பர்கர் தயாரிப்பதற்கு 16 மணி நேரம் ஆனது. 3 மாதங்கள் திட்டமிட்டு, 47 மாணவர்கள் மற்றும் 5 தலைமை சமையல் வல்லுநர்கள் இந்த பர்கர் தயாரிப்பில் ஈடுபட்டனர். 134 பவுண்டு எடையை கொண்டுள்ள பர்கர் தான் உலக சாதனை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 

கீரை, தக்காளி, பட்டாணி, சிவப்பு முட்டைக்கோஸ், லெட்டூஸ் மற்றும் ஆலிவ் போன்ற காய்கறி வகைகள் பயன்படுத்தப்பட்டன. இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளின் பிரத்தேயகமான பிரட் வகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரோமா நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார், ஏ.ஜே.கே கல்லூரி செயலாளர் அஜித்குமார் வரவேற்புரையாற்றினார்.  ஏ.ஜே.கே கல்லூரி இயக்குனர் பிந்து அஜித், கேட்டரிங் துறைத் தலைவர் பிரகாஷ், ஆலோசகர் சம்பத் மற்றும் மேலாண்மை ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...