தீபாவளியை முன்னிட்டு கோவையில் கூடுதல் அரசு பேருந்துகள் அறிமுகம்.


தீபாவளியை முன்னிட்டு கோவையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து தமிழக அரசு போக்குவரத்துக் 

கழகத்தின் கோவை மாவட்ட பொது மேலாளர் கோவிந்தராஜன் நம்மிடம் கூறியதாவது:- 

''தீபாவளி திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்வதால் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில், கோவை கோட்டத்திற்கு மட்டும் 350 சிறப்பு பேருந்துகள் இயங்க உள்ளன. இந்த சிறப்பு பேருந்துகள் வரும் அக். 26ம் தேதி முதல் தீபாவளி நாள் வரை இயங்கும். அதனைத் தொடர்ந்து, அக். 30 முதல் நவ. 2ம் தேதி வரை இயங்கும்.

இப்பேருந்துகள் கோவை சிங்காநல்லூர், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து உதகை, சேலம், மதுரை உள்ளிட்டு தமிழகம் முழுவதும் இயக்கப்பட உள்ளன.

பொதுவாக அரசுப் பேருந்துகளில் கட்டணக் கொள்ளைகள் நடைபெறாது. அவ்வாறு ஏதேனும் கட்டணக் கொள்ளை குறித்து பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சிறப்பு பேருந்துகளைத் தவிர்த்து மேலும் கூடுதல் பேருந்துகள் தேவை என்னும் பட்சத்தில் அதற்கும் பேருந்துகள் தயாராக உள்ளது'' என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...