தீபாவளியை முன்னிட்டு கோவையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து தமிழக அரசு போக்குவரத்துக்
கழகத்தின் கோவை மாவட்ட பொது மேலாளர் கோவிந்தராஜன் நம்மிடம் கூறியதாவது:-
''தீபாவளி திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்வதால் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில், கோவை கோட்டத்திற்கு மட்டும் 350 சிறப்பு பேருந்துகள் இயங்க உள்ளன. இந்த சிறப்பு பேருந்துகள் வரும் அக். 26ம் தேதி முதல் தீபாவளி நாள் வரை இயங்கும். அதனைத் தொடர்ந்து, அக். 30 முதல் நவ. 2ம் தேதி வரை இயங்கும்.
இப்பேருந்துகள் கோவை சிங்காநல்லூர், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து உதகை, சேலம், மதுரை உள்ளிட்டு தமிழகம் முழுவதும் இயக்கப்பட உள்ளன.
பொதுவாக அரசுப் பேருந்துகளில் கட்டணக் கொள்ளைகள் நடைபெறாது. அவ்வாறு ஏதேனும் கட்டணக் கொள்ளை குறித்து பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சிறப்பு பேருந்துகளைத் தவிர்த்து மேலும் கூடுதல் பேருந்துகள் தேவை என்னும் பட்சத்தில் அதற்கும் பேருந்துகள் தயாராக உள்ளது'' என்றார்.