சென்ட்ரல், கோயம்பேடுக்கு வெடிகுண்டு மிரட்டல்


சென்னை: சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 8.13 மணியளவில் மொபைல் நம்பர் ஒன்றில் இருந்து ஒரு எஸ்எம்எஸ் தகவல் கிடைத்தது. அதில், போலீஸ் பிடித்து வைத்திருக்கும் ஐஎஸ்எஸ்எஸ் சம்பந்தப்பட்ட நபர்களை அடுத்த 42 மணி நேரத்திற்குள் விடுதலை செய்ய வேண்டும். இல்லை என்றால் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், மற்றும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இரவுக்குள் குண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த எஸ்எம்எஸ் தமிழில் வந்துள்ளது. 2 முறை இந்த எஸ்எம்எஸ் வந்தது. சென்ட்ரல், எழும்பூர் ரயில்வே ஸ்டேசன், கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளுக்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

ரயில்வே ஸ்டேசனின் அனைத்து நடைமேடை, சரக்கு பெட்டக அறை உட்பட எல்லா பகுதிகளும் துப்புரவாக ஆய்வு செய்யப்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நடந்த சோதனையின் முடிவில், எஸ்எம்எஸ்ஸில் வந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, வெடிகுண்டு மிரட்டல் வந்த மொபைல் எண் யாருடையது, எந்த முகவரியில் இருந்து அனுப்பப்பட்டது என்பது தொடர்பாக விசாரிக்கின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...