மும்பை அடுக்கு மாடி கட்டடத்தில் தீ; 2 பேர் பலி; 11 பேர் உயிருடன் மீட்பு

மும்பை: மும்பை அடுக்கு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் பலியாயினர். உயிருக்கு போராடிய 10க்கும் மேற்பட்டோரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். தெற்கு மும்பை பகுதியில் குபி பரேட் பகுதியில் 21 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் மேல் மாடியில் ஒரு பகுதியில் இருந்து தீ பற்றி பரவியது. இதில் பலரும் வெளியேற முடியாமல் சிக்கி தவித்தனர். சம்பவ இடத்திற்கு 8க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. தீயை அணைத்து கட்டுக்கள் கொண்டு வந்தனர் தீயணைப்பு படையினர். 2 பேர் பலியாயினர். 11 பேர் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டனர். தீ பிடித்ததன் காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...