மும்பை: மும்பை அடுக்கு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் பலியாயினர். உயிருக்கு போராடிய 10க்கும் மேற்பட்டோரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். தெற்கு மும்பை பகுதியில் குபி பரேட் பகுதியில் 21 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் மேல் மாடியில் ஒரு பகுதியில் இருந்து தீ பற்றி பரவியது. இதில் பலரும் வெளியேற முடியாமல் சிக்கி தவித்தனர். சம்பவ இடத்திற்கு 8க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. தீயை அணைத்து கட்டுக்கள் கொண்டு வந்தனர் தீயணைப்பு படையினர். 2 பேர் பலியாயினர். 11 பேர் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டனர். தீ பிடித்ததன் காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.