தமிழகத்தில் 2வது நாளாக ரயில் மறியல் போராட்டம்!


சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனிடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக்திதல் 2வது நாளாக இன்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் நேற்று திங்கள்கிழமை (அக்.17), இன்று செவ்வாய்க்கிழமை (அக்.18) ஆகிய இரண்டு நாள்கள் ரயில் மறியல் போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. இந்தப் போராட்டத்துக்கு திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து, அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் பல்வேறு இடங்களில் நேற்று திங்கள்கிழமை (அக்.17) ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமையும் (அக்.18) ரயில் மறியல் போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தொடர்ந்து இன்று 2-வது நாளாக நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக, மக்கள் நலக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி போலீஸார் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...