சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனிடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக்திதல் 2வது நாளாக இன்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் நேற்று திங்கள்கிழமை (அக்.17), இன்று செவ்வாய்க்கிழமை (அக்.18) ஆகிய இரண்டு நாள்கள் ரயில் மறியல் போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. இந்தப் போராட்டத்துக்கு திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து, அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் பல்வேறு இடங்களில் நேற்று திங்கள்கிழமை (அக்.17) ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமையும் (அக்.18) ரயில் மறியல் போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தொடர்ந்து இன்று 2-வது நாளாக நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக, மக்கள் நலக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி போலீஸார் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.