தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் தற்காலிக
பட்டாசுக் கடைகள் அமைக்கும் வணிகர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள்
குறித்து வணிகவரி ஆணைய கூடுதல் தலைமைச் செயலாளர் செய்திக்குறிப்பு
வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளளதாவது:-
''ஒவ்வொரு வருடமும் வணிகர்கள் பல்வேறு இடங்களில் இருந்தும் பட்டாசுகளை கொள்முதல் செய்து தற்காலிக கடைகள் அமைத்து சில்லரை விற்பனை செய்வது வழக்கம். இவ்வாறு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கும் வணிகர்கள் தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச்சட்டத்தின் அடிப்படையில் வணிகவரித் துறையில் பதிவு எண் பெற்ற பிறகே கொள்முதல் மற்றும் விற்பனை செய்ய வேண்டும்.
அனைத்து பட்டாசு வணிகர்களும் தங்களது கொள்முதலுக்கான பட்டியல்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் வணிகர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும் பட்டாசுகளுக்கு பட்டியல்கள் வழங்க வேண்டும். கொள்முதல் மற்றும் விற்பனை குறித்த விபரங்களை தங்களது விற்பனை இடம் அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட வரிவிதிப்பு வட்டத்தில் தாக்கல் செய்து அதற்குண்டான வரியைச் செலுத்த வேண்டும்.
வணிகர்களின் நலன்கருதி தற்காலிகமாக பதிவுச்சான்று பெற ஒவ்வொரு மாவட்ட தலைமை அலுவலகங்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி தற்காலிக பட்டாசு விற்பனை செய்யும் வணிகர்கள் உதவிமையங்களை அணுகி நேரடியாக விண்ணப்பம் செய்து பதிவுச் சான்று பெற்றுக்கொள்ள வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
''ஒவ்வொரு வருடமும் வணிகர்கள் பல்வேறு இடங்களில் இருந்தும் பட்டாசுகளை கொள்முதல் செய்து தற்காலிக கடைகள் அமைத்து சில்லரை விற்பனை செய்வது வழக்கம். இவ்வாறு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கும் வணிகர்கள் தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச்சட்டத்தின் அடிப்படையில் வணிகவரித் துறையில் பதிவு எண் பெற்ற பிறகே கொள்முதல் மற்றும் விற்பனை செய்ய வேண்டும்.
அனைத்து பட்டாசு வணிகர்களும் தங்களது கொள்முதலுக்கான பட்டியல்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் வணிகர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும் பட்டாசுகளுக்கு பட்டியல்கள் வழங்க வேண்டும். கொள்முதல் மற்றும் விற்பனை குறித்த விபரங்களை தங்களது விற்பனை இடம் அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட வரிவிதிப்பு வட்டத்தில் தாக்கல் செய்து அதற்குண்டான வரியைச் செலுத்த வேண்டும்.
வணிகர்களின் நலன்கருதி தற்காலிகமாக பதிவுச்சான்று பெற ஒவ்வொரு மாவட்ட தலைமை அலுவலகங்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி தற்காலிக பட்டாசு விற்பனை செய்யும் வணிகர்கள் உதவிமையங்களை அணுகி நேரடியாக விண்ணப்பம் செய்து பதிவுச் சான்று பெற்றுக்கொள்ள வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.