கோவையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
காவிரி நதிநீர் விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்தில் முதலில் ஒப்புதல் தெரிவித்த மத்திய அரசு பின்னர் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றுதான் அமைக்க முடியும் என்று கூறியதுடன், தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து வருகிறது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி திங்கள், செவ்வாய்கிழமை (அக்-17, 18) ஆகிய 2 நாள்கள் 48 மணி நேர ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து விவசாய சங்கங்களும் அறிவித்திருந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், தமாக, விசிக உள்பட பல்வேறு கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக செவ்வாயன்று (இன்று) காலை கோவை மாவட்டம், வடகோவை ரயில் நிலையத்தில் மத்திய அரசைக் கண்டித்து விசிக-வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் நேரத்தை மாற்றி ரயில் நிலையத்துக்குள் விடுதலை சிறுத்தை கட்சியினர் நுழைய முற்பட்டனர். இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.


காவிரி நதிநீர் விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்தில் முதலில் ஒப்புதல் தெரிவித்த மத்திய அரசு பின்னர் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றுதான் அமைக்க முடியும் என்று கூறியதுடன், தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து வருகிறது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி திங்கள், செவ்வாய்கிழமை (அக்-17, 18) ஆகிய 2 நாள்கள் 48 மணி நேர ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து விவசாய சங்கங்களும் அறிவித்திருந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், தமாக, விசிக உள்பட பல்வேறு கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக செவ்வாயன்று (இன்று) காலை கோவை மாவட்டம், வடகோவை ரயில் நிலையத்தில் மத்திய அரசைக் கண்டித்து விசிக-வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் நேரத்தை மாற்றி ரயில் நிலையத்துக்குள் விடுதலை சிறுத்தை கட்சியினர் நுழைய முற்பட்டனர். இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

