வங்காளதேசத்தில் பயங்கரவாத தலைவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

வங்காளதேசத்தில் கடந்த 2005–ம் ஆண்டு மினிபஸ் ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் இந்து மதத்தை சேர்ந்த ஜெகன்னாத் பரே என்பவர் உள்பட 2 நீதிபதிகள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தடை செய்யப்பட்ட வங்காளதேச ஜமாதுல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த தலைவர் சயாக் அப்துர் ரகுமான் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 2007–ம் ஆண்டு மே 29–ந் தேதி தூக்கிலிடப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு தலைவரான அசாதுல் இஸ்லாம் என்கிற ஆரிப் சம்பவத்தின் போது தப்பி ஓடிவிட்டார். பின்னர் அவரும் 2007–ம் ஆண்டு ஜூலை 10–ந் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கும் விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனையை வங்காளதேச சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆகஸ்டு மாதம் உறுதி செய்தது.

இதைத்தொடர்ந்து குல்னா சிறையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் அசாதுல் இஸ்லாம் தூக்கில் இடப்பட்டார். அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...