கோவையில் திமுக பிரமுகர் வீட்டில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்; போலீசார் தீவிர விசாரணை

கோவை: கோவை வடவள்ளி பகுதியில் திமுக பிரமுகர் ஆனந்தனுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்த இருவர் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக மாற்றி வருவதாக எழுந்த புகாரின்பேரில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்



கோவை: கோவை வடவள்ளி பகுதியில் திமுக பிரமுகர் ஆனந்தனுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்த இருவர் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக மாற்றி வருவதாக எழுந்த புகாரின்பேரில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கோவை வடவள்ளி அருகே உள்ள லட்சுமி நகரில் தி.மு.க. பிரமுகர்

ஆனந்தனுக்கு சொந்தமான

சொகுசு பங்களா ஒன்று உள்ளது. 

இவர் இந்த பங்களாவை ஷேக் மற்றும் ரசித் ஆகிய இருவருக்கும் வாடகைக்கு கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் இவர்கள் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பங்களாவில் பதுக்கி வைத்து, பல்வேறு வகையில் பண மோசடிகள் செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், அந்த பங்களாவிற்கு அடிக்கடி சந்தேகத்திற்குரிய நபர்கள் பலர் வந்து சென்றுள்ளனர். இப்படியிருக்க இந்த சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மத்திய புலனாய்வுத் பிரிவினர் கோவை மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து பேரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர் அந்த பங்களாவில் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 268 கட்டுகள் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பழைய ரூபாய் கட்டுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல திமுக பிரமுகர் ஆனந்தனிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

போலீசார் சோதனைக்காக வந்த பொழுது தப்பிச்சென்ற இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...