இணையதளத்தில் ரம்மி என்னும் சீட்டு விளையாட்டை தடை செய்யக் கோரி இளங்கோவன் என்பவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுகுறித்து இளங்கோவனின் வழக்கறிஞர் கண்ணன் பேசியதாவது:-
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விளையாட்டுகளில் ஒன்று ரம்மி. சூதாட்ட விளையாட்டான இதனை தற்போது இணையதளம் மூலமாக பலரும் விளையாடி வருகின்றனர். மேலும், இதில் பணம் கட்டி பலரும் ஏமாறுகிறார்கள். இந்த விளையாட்டினை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
மேலும், இணையதள ரம்மி விளையாட்டுக்கான விளம்பரத்தில் பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ் மற்றும் ராணா ஆகியோர் நடித்து மக்களை இதில் ஈடுபடுத்தி வருகின்றனர். எனவே, அவர்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.