வடகிழக்கு பருவமழை முன்னிட்டு கோவையில் ஆய்வுக் கூட்டம்


கோவை மாவட்ட மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சாரிக்கை நடவடிக்கைகள் குறித்தான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் செவ்வாயன்று  நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பேசுகையில், வடகிழக்கு பருவமழை வருவதை முன்னிட்டு மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மழை காலங்களில் மாவட்ட நிர்வாகம் அமைத்த பேரிடர் குழுவுடன் இணைந்து மாநகராட்சி பணியாளர்களும் பணியாற்றுவார்கள். மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து நீரினை உடனடியாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்று ஏற்பாடாக வெள்ள நிவாரண தங்குமிடங்களான பள்ளிக்கூடம், சமுதாயக் கூடம், திருமண மண்டபம் ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் பயன்படுத்துவதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கவும் மற்றும் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.



மேலும், மழைக்காலங்களில் வரும் புகார்களை கண்காணிக்க 24 மணிநேரமும் செயல்படும் வகையில் 8190000200 ஆகிய  தொலைபேசி எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மழைக்காலங்களில் நாய் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க பொதுமக்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள தெருக்களில் கழிவுகளை அகற்றிடவும் திறந்தவெளி கழிப்பிடங்களை பயன்படுத்த வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தியும் சுற்றுப்புறங்களை சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். குடிநீர் மேல்நிலைத் தொட்டி மற்றும் நீர் தொட்டிகளை காலமுறையில் சுத்தம் செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், நகர்நல அலுவலர் மரு.சந்தோஷ்குமார் மற்றும் அனைத்து உதவி ஆணையர்கள், பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...