கோவையில் அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் நலசங்கம் கூட்டமைப்பு சார்பாக ஆலோசனை கூட்டம் இன்று சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தி௫மண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கடந்த மாதம் 9-9-2016ம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றம், பட்டா மனைகளையும் அங்கிகாரம் பெறாமல் கட்டியுள்ள வீடு மற்றும் வீட்டுமனைப் பிரிவுகளையும் இனிமேல் பதிவுசெய்ய இடைக்கால தடை உத்தரவு பிறபித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள இந்த உத்தரவினால் தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
இதுகுறித்து, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி பேசும்பொழுது:- உயர்நீதிமன்றம் உத்தரவினால் ரியல் எஸ்டேட் தொழில் முடங்கி கிடப்பதுடன் இத்தொழிலை நம்பியுள்ள இலட்சக்கணக்கான முகவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. பத்திரப்பதிவு துறைக்கு ஆண்டுக்கு 8ஆயிரத்து 500கோடி வ௫வாய் ஈட்டித் த௫வதும் இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இடைக்கால தடை உத்தரவை நீக்கக்கோரி தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என அரசை கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.
இதில், மேற்கு மண்டல தலைவர் நேரு நகர் நந்து மற்றும் ஒ௫ங்கிணைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்ட மாநில முழுவதும் உள்ள ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், கடந்த மாதம் 9-9-2016ம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றம், பட்டா மனைகளையும் அங்கிகாரம் பெறாமல் கட்டியுள்ள வீடு மற்றும் வீட்டுமனைப் பிரிவுகளையும் இனிமேல் பதிவுசெய்ய இடைக்கால தடை உத்தரவு பிறபித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள இந்த உத்தரவினால் தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
இதுகுறித்து, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி பேசும்பொழுது:- உயர்நீதிமன்றம் உத்தரவினால் ரியல் எஸ்டேட் தொழில் முடங்கி கிடப்பதுடன் இத்தொழிலை நம்பியுள்ள இலட்சக்கணக்கான முகவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. பத்திரப்பதிவு துறைக்கு ஆண்டுக்கு 8ஆயிரத்து 500கோடி வ௫வாய் ஈட்டித் த௫வதும் இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இடைக்கால தடை உத்தரவை நீக்கக்கோரி தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என அரசை கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.
இதில், மேற்கு மண்டல தலைவர் நேரு நகர் நந்து மற்றும் ஒ௫ங்கிணைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்ட மாநில முழுவதும் உள்ள ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.