ஜி.ஆர்.டி கல்லூரியில் வணிகவியல் துறை மாணவர்களின் கண்காட்சி

கோவை: அவிநாசி சாலையில் உள்ள ஜி.ஆர்.டி கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் ஆண்டு சந்தை காட்சி படுத்துதல் என்ற கண்காட்சி நிகழ்ச்சி இன்று காலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை, வணிகவியல் துறை இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் ஏற்பாடு செய்தனர். 
ஜி.ஆர்.டி கல்லூரி இயக்குநர் ராமச்சந்திரன் இந்நிகழ்வினை திறந்து வைத்தார்.

பின்னர், அவர் பேசுகையில்: ஜி.ஆர்.டி கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் மாணவர்கள் சேர்ந்து அமைத்துள்ளனர். இந்த துறையில் உள்ள மாணவர்கள் ஒன்று சேர்ந்து வணிகவியல் மேலாண்மை குறித்து 13 கூடங்கள் உருவாக்கி உள்ளனர். ஒவ்வொரு கூடங்களிலும் மேலாண்மை கருத்துக்கள் பற்றிய தகவல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, ஒவ்வொரு தகவலும் ஒரு செய்தியை தெரிவிக்கிறது. என அவர் தெரிவித்தார். 

மேலும், முதுநிலை வணிக துறை(எம்பிஏ) முதல் ஆண்டு மாணவர்கள் இணைந்து சில தனிப்பட்ட சுவைகளில் கல்லூரி மைதானத்தில் கடைகள் அமைத்தனர். இதில், அணித் தலைவர் சௌந்தரி, உணவு ஊக்குவிக்கும் கருத்துக்கள் பற்றி அவர் பேசுகையில்:- நம் உண்ணும் உணவிற்கு கவனம் கொள்ள வேண்டும். உணவு வீணாக்க வேண்டாம் மூன்றில் ஒரு பங்கு உணவு உலகம் முழுவதும் வீணாகி வருகிறது. உணவு வீணாகுவதை மக்களிடம் நாம் ஊக்குவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என அவர் கூறினார்.





Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...