இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு (CII) தனது உறுப்பினர்களுக்காக வருமான வரி குறித்து (TDs ) கருத்தரங்கு நடத்தியது. இக்கருத்தரங்கு "பெரு நிறுவன இணைப்பு மற்றும் நேருக்கு நேர் கலந்தாய்வு" என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் வருமான வரித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நேத்ரா ஜெயவர்தனவேலு குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் நடைமுறை சவால்களை பற்றி ஆடிட்டர் கார்த்திகேயன் விளக்கம் அளித்தார்.

பின்னர், வருமான வரி ஆணையாளர் பாலசுப்ரமணியன் வரி பிடிப்பாளர்களின் வரி பிடித்தம், அதன் முக்கியத்துவம் மற்றும் தேவையை பற்றி அவர் பேசுகையில், வரி பிடித்தம் செய்யாமல் கொடுக்கப்படும் தொகையை செலவுகணக்கில் எழுத வருமான வரிச்சட்டம் அனுமதிப்பதில்லை. என்றும் வரிப்பிடித்தம் செய்து அதை அரசாங்கத்திற்கு குறித்த காலத்தில் கட்டாதவர்கள் மீது சிறை தண்டனை என்றும் கூறினார். வரிப்பிடித்தம் செய்த பின் அது உடனடியாக அரசுக்கு சொந்தமானது என்றும் அது வரி பிடிப்பாளர்களின் மற்ற செலவுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள கூடாது என்றும் இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.
வருமான வரி துறை இணை ஆணையர் வின்சன்ட் சகாயராஜ், வருமான வரி உதவி ஆணையர் கல்பலதா, வருமான வரி அதிகாரி நாகராஜன் மற்றும் பிற அதிகாரிகள் பல்வேறு சட்டங்கள் மற்றும் (TDs) விதிகள் குறித்து விளக்கினர்.

இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் வருமான வரி பற்றிய கேள்விகளுக்கான விளக்கங்களை பெற்றுக் கொண்டனர்.

பின்னர், வருமான வரி ஆணையாளர் பாலசுப்ரமணியன் வரி பிடிப்பாளர்களின் வரி பிடித்தம், அதன் முக்கியத்துவம் மற்றும் தேவையை பற்றி அவர் பேசுகையில், வரி பிடித்தம் செய்யாமல் கொடுக்கப்படும் தொகையை செலவுகணக்கில் எழுத வருமான வரிச்சட்டம் அனுமதிப்பதில்லை. என்றும் வரிப்பிடித்தம் செய்து அதை அரசாங்கத்திற்கு குறித்த காலத்தில் கட்டாதவர்கள் மீது சிறை தண்டனை என்றும் கூறினார். வரிப்பிடித்தம் செய்த பின் அது உடனடியாக அரசுக்கு சொந்தமானது என்றும் அது வரி பிடிப்பாளர்களின் மற்ற செலவுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள கூடாது என்றும் இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.
வருமான வரி துறை இணை ஆணையர் வின்சன்ட் சகாயராஜ், வருமான வரி உதவி ஆணையர் கல்பலதா, வருமான வரி அதிகாரி நாகராஜன் மற்றும் பிற அதிகாரிகள் பல்வேறு சட்டங்கள் மற்றும் (TDs) விதிகள் குறித்து விளக்கினர்.

இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் வருமான வரி பற்றிய கேள்விகளுக்கான விளக்கங்களை பெற்றுக் கொண்டனர்.