வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
பருவமழைக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சென்னையில் செப். 21-இல் தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இவ்வாறு பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னை எழிலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், உதயகுமார் பேசியதாவது:-
கடந்த ஆண்டு பருவமழை பாதிப்புகளை கணக்கில் கொண்டு இந்தாண்டு எவ்வித பாதிப்பும் தமிழகத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, அரசின் அனைத்து துறைகளையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பருவமழைக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சென்னையில் செப். 21-இல் தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இவ்வாறு பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னை எழிலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், உதயகுமார் பேசியதாவது:-
கடந்த ஆண்டு பருவமழை பாதிப்புகளை கணக்கில் கொண்டு இந்தாண்டு எவ்வித பாதிப்பும் தமிழகத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, அரசின் அனைத்து துறைகளையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.