ஜம்மு-காஷ்மீர்: போர் நிறுத்த விதிகள் மீறி தாக்குதல் நடைபெற்று வருவதால் சர்வதேச எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்லை பற்றி விவசாயிகள் கவலைப்படுகின்றனர்.
எல்லையில் போர் பதற்றம் நிலவிவருவதால் நாங்கள் மிகுந்த நெருக்கடிகளையும், சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறோம். பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், தொழிலாளர் வந்து அறுவடை செய்ய தயாராக இல்லை என்று விவசாயி ஒருவர் தெரிவித்தார்.
இந்த பதற்றமான சூழ்நிலையிலும் உயிர்வாழ பயிர்களை அறுவடை செய்ய வேண்டும். அதனால் நாங்களே அறுவடை செய்ய முயல்கின்றோம் என்றும் மற்றொரு விவசாயி தெரிவித்தார்.
எல்லையில் போர் பதற்றம் நிலவிவருவதால் நாங்கள் மிகுந்த நெருக்கடிகளையும், சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறோம். பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், தொழிலாளர் வந்து அறுவடை செய்ய தயாராக இல்லை என்று விவசாயி ஒருவர் தெரிவித்தார்.
இந்த பதற்றமான சூழ்நிலையிலும் உயிர்வாழ பயிர்களை அறுவடை செய்ய வேண்டும். அதனால் நாங்களே அறுவடை செய்ய முயல்கின்றோம் என்றும் மற்றொரு விவசாயி தெரிவித்தார்.