புகையிலை பொருட்களை பதுக்கிய வழக்கு - முன்னாள் துணை காவல் ஆணையர் ஆஜர்


கோவையில் கடந்த 2014ம் ஆண்டு சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பணை செய்யப்பட்டதாக, தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மாநகர துணை காவல் ஆணையர் உட்பட, 5 காவல்துறையினர் கோவை குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

கடந்த 2014ம் ஆண்டு கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த மங்கள்ராஜ் என்ற வியாபாரி தனது குடோனில் வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மாயமானதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர். 

இதனிடையே இவ்வழக்கில் அப்போது கோவை மாநகர துணை ஆணையராக பணியாற்றிய சுகுமார், உதவி ஆய்வாளர் செல்வராஜ், காவலர்கள் செந்தில்குமார், ஜான், கதிரேசன் ஆகிய 5 காவல்துறையினருக்கும் தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் கூறியதை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 

இதை தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய 17 பேர் மீதும் சிபிசிஐடி காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதன் பேரில் 17 பேரையும் ஆஜராகுமாறு கோவை குற்றவியல் முதன்மை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதை தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 காவல்துறையினர் உட்பட 17 பேர் இன்று நீதிபதி மதுரசேகர் முன்னிலையில் ஆஜராகினர்.

இதையடுத்து வழக்கை வருகிற நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். முன்னாள் துணை காவல் ஆணையராக பணியாற்றி வந்த சுகுமார் தற்போது பழனி சிறப்பு காவல்படை பட்டாலியன் கமான்டண்ட் ஆக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் 5 போலீசார் ஆஜரானதை அடுத்து நீதிமன்ற வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...