கோவையில் இரு கல்லூரி மாணவிகள் மாயம் - விசாரணை


கோவை: கிருஷ்ணகிரி மாவட்டம், பூச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் மோனிசா (19). கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பிஎஸ்.சி இறுதியாண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி பயின்று வரும் இவர் திங்களன்று இரவு நீண்ட நேரமாகியும் விடுதிக்கு வராததால் விடுதிக் காப்பாளர் மோனிசாவின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, கோவை வந்த கிருஷ்ணமூர்த்தி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றோரு சம்பவம்:

கோவை மாவட்டம், ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் ராஜேஸ்வரி (17) கோவையில் தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில், திங்களன்று கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு 

சென்ற ராஜேஸ்வரி இரவு நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பவில்லை. 

இதனைத்தொடர்ந்து ஆறுமுகம், கல்லூரி மற்றும் அவரது தோழிகள் வீட்டில் ராஜேஸ்வரியை தேடியுள்ளார். எங்கும் அவர் கிடைக்காத நிலையில், ரத்தினபுரி காவல் நிலையத்தில் செவ்வாயன்று ஆறுமுகம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் அடுத்தடுத்து இரு கல்லூரி மாணவிகள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...