நண்பரை சுட்டுக் கொன்ற சவுதிஅரேபிய இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சவுதிஅரேபிய அரச குடும் பத்தை சேர்ந்த இளவரசர் டர்கி பின் சவுத் அல்- கபிர்  இவரது நண்பர் அதெல் அல் மகிமித். இவரும் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள்.

கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவர்களுக்குள் சண்டை மூண்டது. இதில் ஆத்திரம் அடைந்த இளவரசர் கபிர் தனது நண்பர்  மகிமித்தை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் அதே இடத்தில் பலியானார்.
மேலும் ஒருவர்  காயம் அடைந்தார்.  இச்சம்பவம் 2012-ம்  ஆண்டு டிசம்பரில் நடந்தது.

இந்த வழக்கு ரியாத் கோர்ட்டில்  நடந்தது. 2014-ம் ஆண்டில் இக் கொலை  வழக்கில் இளவரசர் கபிருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து  நேற்று அவரது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இவரை தொடர்ந்து இந்த ஆண்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் கபிர் 134-வது நபர் ஆவார். குறிப்பாக  சவுதி அரச குடும்பத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படு வது மிகவும் அபூர்வமாகும். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...