ராணுவ வீரர்களுக்கான ஆட்தேர்வு முகாம்- கோவையில் குவிந்த இளைஞர்கள்

கோவையில் ராணுவ வீரர்களுக்கான ஆட்தேர்வு முகாம் புதனன்று (இன்று) துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இளைஞர்கள் கோவையில் குவிந்துள்ளனர்.

சென்னை 110 ராணுவ பட்டாலியன் மேற்பார்வையில் பிராந்திய ராணுவப்படை வீரர்களுக்கான ஆட்தேர்வு முகாம், கோவை காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் புதனன்று அதிகாலை துவங்கியது. இதில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி என இராஜஸ்தான் முதல் லக்க்ஷதீப் வரை உள்ள 14 மாநிலங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்தி 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். 

முன்னதாக தேர்வில் கலந்துகொள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மைதானத்தை சுற்றி காத்திருந்ததால் காவல் துறையினர் அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் செவ்வாயன்று இரவு முதல் ஈடுபட்டனர். கர்னல்.லோகநாதன் தலைமையில் நடத்தப்பட்டு வரும் இம்முகாமில், முதற்கட்டமாக இளைஞர்களின் உடற்தகுதி தேர்வான ஓட்டப் பந்தயம், நீலம் தாண்டுதல் போன்ற தேர்வுகள் நடத்தப்படுவதுடன் அவர்களின் எடை, உயரம் உள்ளிட்ட உடற்தகுதிகளும் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இன்று நடைபெறும் தேர்வில், தேர்ச்சிபெறும் இளைஞர்கள் அடுத்து மருத்துவ சோதனைகள் மற்றும் நேர்முக தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற 23 ஆம் தேதிக்குள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

4 ஆயிரத்தி 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ள இந்த பிராந்திய ராணுவப் படை வீரர்களுக்கான தேர்வில் 23 வீரர்களும், ஒரு ராணுவ மெஸ் பணியாளரும் தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...