மொசூல்: ஈராக்கின் மொசூலிலிருந்து சுமார் 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எல்லையைத் தாண்டி சிரியாவுக்குள் நுழைந்துவிட்டதாக ஐநா அகதிகள் நிறுவனம் கூறியுள்ளது. ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் மொசூல் நகரை மீண்டும் கைப்பற்ற அமெரிக்கப் படைகளின் ஆதரவோடு ஈராக் படைகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து, மொசூல் நகரிலிருந்து சுமார் 900 மக்கள் தப்பி சிரியாவுக்குள் நுழைந்ததாக தகவல் வந்துள்ளது.
தெற்கு பகுதியிலிருந்து முன்னேறி வரும் ஈராக் படைகள், பொதுமக்கள் வசிக்கும் பெரிய கிராமங்களை தாண்டி ஏற்கனவே மொசூல் நகரில் ஏற்கனவே கைப்பற்றிய இடங்களில் தங்கள் பலத்தி பெருக்கி வருவதாகவும் தகவலில் கூறப்பட்டுள்ளது.
தெற்கு பகுதியிலிருந்து முன்னேறி வரும் ஈராக் படைகள், பொதுமக்கள் வசிக்கும் பெரிய கிராமங்களை தாண்டி ஏற்கனவே மொசூல் நகரில் ஏற்கனவே கைப்பற்றிய இடங்களில் தங்கள் பலத்தி பெருக்கி வருவதாகவும் தகவலில் கூறப்பட்டுள்ளது.