''வளர்ந்துவரும் பயோமெட்டீரியல்ஸ்''- தேசிய கருத்தரங்கு

கோவை பாரதியார் பல்கலைக் கழக நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மற்றும் சமூகத்திற்கான பயோமெட்டீரியல்ஸ் மற்றும் செயற்கை உறுப்புகள் நிறுவனம் இணைந்து நடத்தும் ''வளர்ந்துவரும் பயோமெட்டீரியல்ஸ்'' என்ற மூன்று நாள் தேசிய கருத்தரங்கின் துவக்க விழா பல்கலைக் கழக உஷா கீர்த்திலால் மேத்தா அரங்கில் புதனன்று (இன்று) நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் கணபதி தலைமையேற்றார். சமூகத்திற்கான பயோமெட்டீரியல்ஸ் மற்றும் செயற்கை உறுப்புகள் நிறுவனத்தின் தலைவர் சி.பி.சர்மா, பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரும், கங்கா மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் ராஜ சபாபதி, பல்கலைக் கழக பதிவாளர் மோகன் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்றனர். இதில், நானோ அறிவியல் துறை பேராசிரியர் பலமுருகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.



இதனைத்தொடர்ந்து சர்மா, பயோமெட்டீரியல்ஸின் தோற்றம் மற்றும் தேவைகள் குறித்தும், தன் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். இந்த கருத்தரங்கில், இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள், பல்வேறு பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்கள், பாரதியார் பல்கலையைச் சேர்ந்த பல்வேறு துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவின் முடிவில் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தலைவர் பொன்பாண்டியன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...