கோவை: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய கல்லூரியில் மாணவர்களுக்கான பாஸ்போர்ட் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 1000த்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறையப் பற்றி தெரிந்து கொண்டனர்.
இது குறித்து கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சசிகுமார் சிம்ப்ளிசிட்டி நிருபரிடம் கூறியதில்:-
பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறையப் பற்றி கல்லூரி மாணவர்கள் தெரிந்து கொள்ள இம்முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமிற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த முகாமில் மாணவர்களுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறையைப் பற்றி உரிய ஆவணங்கள் வைத்து, ஆன்லைன் மூலம் கற்பித்துக் கொடுக்கப்பட்டது. மாணவர்கள் முகாமில் ஆர்வம் காட்டியபோது அவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை பற்றி அவர்கள் மனதில் இருந்த பல்வேறு கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கப்பட்டது. மேலும் மாணவர்கள் மிக விரைவில் மாணவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கவும், இது குறித்து செயல்முறை பற்றிய தகவல் மேலும் அறியவும் பாஸ்போர்ட் அலுவலகம் வந்து பயனடையலாம் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது குறித்து கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சசிகுமார் சிம்ப்ளிசிட்டி நிருபரிடம் கூறியதில்:-
பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறையப் பற்றி கல்லூரி மாணவர்கள் தெரிந்து கொள்ள இம்முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமிற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த முகாமில் மாணவர்களுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறையைப் பற்றி உரிய ஆவணங்கள் வைத்து, ஆன்லைன் மூலம் கற்பித்துக் கொடுக்கப்பட்டது. மாணவர்கள் முகாமில் ஆர்வம் காட்டியபோது அவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை பற்றி அவர்கள் மனதில் இருந்த பல்வேறு கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கப்பட்டது. மேலும் மாணவர்கள் மிக விரைவில் மாணவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கவும், இது குறித்து செயல்முறை பற்றிய தகவல் மேலும் அறியவும் பாஸ்போர்ட் அலுவலகம் வந்து பயனடையலாம் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.