சட்டமன்ற தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கவில்லை-தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்



சட்டமன்ற தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவான் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த போது தமிழக இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகளில் வெற்றிக்காக காங்கிரஸ் தொண்டர்கள் உழைக்க வேண்டும் என ராகுல் அறிவுறுத்தியதாக தெரிவித்த அவர் உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருடன் சுமூக உறவு உள்ளதாக தெரிவித்த அவர் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி தொடர்பாக தொடர்ந்து அவ்வப்போது கருத்துக்கள் கூறி வருவதாகவும் அவர் அப்போது கூறினார். முதல்வருக்கு சிகிச்சை அளிக்க லண்டன் மருத்துவர் 3 முறை வந்துள்ளது, அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதை உணர்த்துவதாக தெரிவித்த அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடைபெற்ற போராட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் இன்னும் அதிக அளவில் கலந்து கொண்டிருக்க வேண்டும் என தாம் கருதுவதாக கருத்து தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியில் தமக்கு புதிய பதவி அறிவிக்கப்பட்டால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாகவும் இளங்கோவன் அப்போது தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...