மேற்கு தொடர்ச்சி மலையடிவாரமான கோவை மாங்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெரியதடாகம், கரியாங்குட்டை அருகே காட்டு யானை ஒன்று படுத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறைமருத்துவர் மனோகரன் தலைமையில் ஆனைகட்டி கால்நடைத்துறை மருத்துவர் ஜெயந்தி மற்றும் வனத்துறையினர் அங்குசென்று பார்த்த போது சுமார் 30 வயதுமதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உடல் நலகுறைவினால் சோர்வுடன் படுத்திருப்பதைகண்டனர்.
இதை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ள அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். யானை படுத்திருக்கும் பகுதிக்கு அருகாமையில் 5 யானைகள் கொண்ட கூட்டம் உள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள யானை கடந்த 6 மாத காலத்திற்கு முன்பு தான் குட்டி ஈன்றிருந்தாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் மதுக்கரைவனப்பகுதியில் வளையன்குட்டை பகுதியில் யானை ஒன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு யானை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது வன உயிரினஆர்வலர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.