கோவை பவர் ஹவுஸ் பகுதியில் அனைத்து கட்சிகளின் சார்பில் சமூக ஆர்வலர் சிவாவை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், ஆதித்தமிழர் கட்சி, சமூக நீதிக்கட்சி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட சூழல் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், கார்ப்ரேட் சாமியார் ஜக்கி வாசுதேவுக்கு ஆதரவாக கோவை மாவட்ட காவல்துறையினர் செயல்படுவதாகவும், சட்டவிரோதமாக ஈஷா மையத்தில் நடைபெரும் புகார்கள் குறித்து இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, பொய்யான புகாரின் பேரில் சமூக ஆர்வலர் சிவாவை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், உடனடியாக பொய்வழக்கை திரும்பப்பெற்று விடுதலை செய்ய வேண்டும், மேலும், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் ஜக்கிவாசுதேவை கைது செய்ய வேண்டும் என உரையாற்றினர். முன்னதாக போராட்டத்திற்கு அனுமதி மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், ஆதித்தமிழர் கட்சி, சமூக நீதிக்கட்சி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட சூழல் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், கார்ப்ரேட் சாமியார் ஜக்கி வாசுதேவுக்கு ஆதரவாக கோவை மாவட்ட காவல்துறையினர் செயல்படுவதாகவும், சட்டவிரோதமாக ஈஷா மையத்தில் நடைபெரும் புகார்கள் குறித்து இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, பொய்யான புகாரின் பேரில் சமூக ஆர்வலர் சிவாவை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், உடனடியாக பொய்வழக்கை திரும்பப்பெற்று விடுதலை செய்ய வேண்டும், மேலும், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் ஜக்கிவாசுதேவை கைது செய்ய வேண்டும் என உரையாற்றினர். முன்னதாக போராட்டத்திற்கு அனுமதி மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.