கோவை பவர் ஹவுஸ் பகுதியில் அனைத்து கட்சிகளின் சார்பில் சமூக ஆர்வலர் சிவாவை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை பவர் ஹவுஸ் பகுதியில் அனைத்து கட்சிகளின் சார்பில் சமூக ஆர்வலர் சிவாவை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், ஆதித்தமிழர் கட்சி, சமூக நீதிக்கட்சி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட சூழல் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். 

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், கார்ப்ரேட் சாமியார் ஜக்கி வாசுதேவுக்கு ஆதரவாக கோவை மாவட்ட காவல்துறையினர் செயல்படுவதாகவும், சட்டவிரோதமாக ஈஷா மையத்தில் நடைபெரும் புகார்கள் குறித்து இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, பொய்யான புகாரின் பேரில் சமூக ஆர்வலர் சிவாவை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், உடனடியாக பொய்வழக்கை திரும்பப்பெற்று விடுதலை செய்ய வேண்டும், மேலும், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் ஜக்கிவாசுதேவை கைது செய்ய வேண்டும் என உரையாற்றினர். முன்னதாக போராட்டத்திற்கு அனுமதி மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைதுசெய்தனர். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...