ஜம்மு-காஷ்மீரில் இந்தியா-சீன கூட்டு ராணுவப் பயிற்சி

புதுடில்லி: இந்திய-சீன கூட்டு ராணுவப் பயிற்சி ஜம்மு காஷ்மீரில் நேற்று நடைபெற்றது.

கூட்டு ராணுவப் பயிற்சி:

இதுகுறித்து இந்திய ராணுவம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா-சீனா இடையேயான முதலாவது கூட்டு ராணுவ பயிற்சி, கடந்த பிப்.,6ல் சீனாவின் கிழக்கு லடாக்கின் ஹட் பகுதியில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்தியாவில், ஜம்மு-காஷ்மீரில் நேற்று கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்றது.

இயற்கை பேரழிவுகளில்:

இதில் எல்லையோர கிராமங்களில் இயற்கை பேரழிவுகள் ஏற்படும்போது உதவிகள் செய்வதற்கு இரு நாட்டு வீரர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு இந்திய வீரர்களுக்கு பிரிகேடியர் ஆர்.எஸ்.ராமனும், சீனப் படைக்கு சீனியர் கர்னல் பன் ஜன்னும் தலைமை தாங்கினர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறவில் விரிசல்:

அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் உறுப்பினராகச் சேர்வது, மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா., அறிவிப்பது உள்ளிட்ட விவகாரங்களில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இக்கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...