பிஎன்ஐ சேம்பியன்ஸ் 150வது வார சந்திப்பு விழா


பிஎன்ஐ சேம்பியன்ஸ் சார்பில் தொழிலதிபர்களுடனான 150வது வார சந்திப்பு நிகழ்ச்சி அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. 



இந்த சந்திப்பில் 55க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். இந்த அமைப்பின் மூலம் இதுவரை ரூபாய் 100 கோடி தொழில் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த சந்திப்பின் போது அவர்கள், தங்களை பற்றியும், தொழில் முறைகள் குறித்தும் தகவல்கள்களை பரிமாற்றிக் கொண்டனர். 



இதனைத்தொடர்ந்து, பி.என்.ஐ-யின் கோவை தலைவர் ராம் பிரசாத் நம்மிடம் கூறியதாவது:- 

''கோவையில் உள்ள பல்வேறு தொழில் முனைவோர்கள் இதில் கலந்து கொண்டனர். வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் எங்களது சந்திப்பு நடைபெறுகிறது. அதன்படி இன்று 150வது சந்திப்பு நடந்துள்ளது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய தொழில் முனைவோர் எங்களுடன் இணைந்தனர். இந்த அமைப்பு, தொழில் முனைவோர்களுடனான தகவல் மற்றும் தொழில் பறிமாற்றத்திற்கு மிகவும் உதவியானது'' என்று கூறினார். 



இவ்விழாவில், பி.என்.ஐ உருப்பினர்கள், தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...