பிஎன்ஐ சேம்பியன்ஸ் சார்பில் தொழிலதிபர்களுடனான 150வது வார சந்திப்பு நிகழ்ச்சி அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் 55க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். இந்த அமைப்பின் மூலம் இதுவரை ரூபாய் 100 கோடி தொழில் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த சந்திப்பின் போது அவர்கள், தங்களை பற்றியும், தொழில் முறைகள் குறித்தும் தகவல்கள்களை பரிமாற்றிக் கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, பி.என்.ஐ-யின் கோவை தலைவர் ராம் பிரசாத் நம்மிடம் கூறியதாவது:-
''கோவையில் உள்ள பல்வேறு தொழில் முனைவோர்கள் இதில் கலந்து கொண்டனர். வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் எங்களது சந்திப்பு நடைபெறுகிறது. அதன்படி இன்று 150வது சந்திப்பு நடந்துள்ளது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய தொழில் முனைவோர் எங்களுடன் இணைந்தனர். இந்த அமைப்பு, தொழில் முனைவோர்களுடனான தகவல் மற்றும் தொழில் பறிமாற்றத்திற்கு மிகவும் உதவியானது'' என்று கூறினார்.

இவ்விழாவில், பி.என்.ஐ உருப்பினர்கள், தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

