இந்தியாவில் முதன்முறையாக கோவையில் தன்வந்திரி மருத்துவ சுற்றுலா சார்பில் நோயாளிகளுக்காக மொபைல் செயலி சேவை தொடங்கப்படுகிறது. இனி வரும் காலாண்டில் பெங்களூர் மற்றும் சென்னையில் இச்சேவை துவங்கப்பட உள்ளது.
தன்வந்திரி மருத்துவ சுற்றுலா சார்பாக இந்தியாவில் சிறந்த மருத்துவ வசதிகள் மற்றும் நம்பகமான உயிர் காக்கும் சுகாதார சேவைகளை வழங்கும் முதல் முயற்சியாக நோயாளிகளுக்கென்றே சிறப்பான மொபைல் செயலியை அறிமுகப்படுத்துகிறது. இந்த சேவை இந்தியாவிலேயே முதன்முறையாக கோவையில் தொடங்கப்படும் மருத்துவ சேவை மற்றும் உடல் உறுப்பு தானத்திற்கான இலவச சேவை ஆகும்.
உடல் நலம் குறித்த அனைத்து விதமான தகவல்களையும், சேவைகளையும் இந்த ஒரே பயன்பாட்டின் மூலம் அறியலாம்.
மேலும் இதில், கோவையில் உள்ள மருத்துவமனைகள், அதன் முகவரி, சிறப்பு சேவை உள்ளிட்டவற்றையும் அறியலாம்.
இதுகுறித்து தன்வந்திரி மருத்துவ சுற்றுலா துணை நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பி.சிவசெந்தூரன் கூறுகையில், இந்தியாவில் தோராயமாக 2 லட்சம் மக்கள் சிறுநீரகம் மற்றும 1 லட்சம் மக்கள் கல்லீரல் மாற்று சிகிச்சைக்கான தேவையில் உள்ளனர். ஆனால், இவர்களில் 2 முதல் 3 சதவிகிதத்தினர் மட்டுமே நன்கொடையாளர்கள் கிடைக்கப்பெறுகின்றனர். ஆகவே, இந்த பயன்பாட்டின் மூலம் உடல் ஊறுப்பு தானம் குறித்து தனிநபர்களிடம் விழிப்புணவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
மேலும், இதில், 1 ஜிபி வரையிலான மருத்துவ கோப்புகள் குறித்த தகவல்களை இலவசமாக சேமிக்க முடியும்'' என்றார்.