இந்தியாவில் முதன்முறையாக உடல் உறுப்புதானத்திற்கு புதிய செயலி


இந்தியாவில் முதன்முறையாக கோவையில் தன்வந்திரி மருத்துவ சுற்றுலா சார்பில் நோயாளிகளுக்காக மொபைல் செயலி சேவை தொடங்கப்படுகிறது. இனி வரும் காலாண்டில் பெங்களூர் மற்றும் சென்னையில் இச்சேவை துவங்கப்பட உள்ளது.

தன்வந்திரி மருத்துவ சுற்றுலா சார்பாக இந்தியாவில் சிறந்த மருத்துவ வசதிகள் மற்றும் நம்பகமான உயிர் காக்கும் சுகாதார சேவைகளை வழங்கும் முதல் முயற்சியாக நோயாளிகளுக்கென்றே சிறப்பான மொபைல் செயலியை அறிமுகப்படுத்துகிறது. இந்த சேவை இந்தியாவிலேயே முதன்முறையாக கோவையில் தொடங்கப்படும் மருத்துவ சேவை மற்றும் உடல் உறுப்பு தானத்திற்கான இலவச சேவை ஆகும்.

உடல் நலம் குறித்த அனைத்து விதமான தகவல்களையும், சேவைகளையும் இந்த ஒரே பயன்பாட்டின் மூலம் அறியலாம். 

மேலும் இதில், கோவையில் உள்ள மருத்துவமனைகள், அதன் முகவரி, சிறப்பு சேவை உள்ளிட்டவற்றையும் அறியலாம்.

இதுகுறித்து தன்வந்திரி மருத்துவ சுற்றுலா துணை நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பி.சிவசெந்தூரன் கூறுகையில், இந்தியாவில் தோராயமாக 2 லட்சம் மக்கள் சிறுநீரகம் மற்றும 1 லட்சம் மக்கள் கல்லீரல் மாற்று சிகிச்சைக்கான தேவையில் உள்ளனர். ஆனால், இவர்களில் 2 முதல் 3 சதவிகிதத்தினர் மட்டுமே நன்கொடையாளர்கள் கிடைக்கப்பெறுகின்றனர். ஆகவே, இந்த பயன்பாட்டின் மூலம் உடல் ஊறுப்பு தானம் குறித்து தனிநபர்களிடம் விழிப்புணவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். 

மேலும், இதில், 1 ஜிபி வரையிலான மருத்துவ கோப்புகள் குறித்த தகவல்களை இலவசமாக சேமிக்க முடியும்'' என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...