கோவையில் அஞ்சல் ஊழியர்கள் தர்ணா போராட்டம்

ஜி.டி.எஸ் ஊழியருக்கான போனஸ் தொகையை ரூ.7000 ஆக உயர்திக் கொடுக்க வேண்டுமெனவும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அணைத்து அஞ்சல் மற்றும் நிர்வாகப்பிரிவு ஊழியர் சங்கங்கள் இணைந்து மாபெரும் மண்டல தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்.எஸ் புரம், தலைமை தபால் நிலையம் முன்னால் ஜி.டி.எஸ் ஊழியருக்கான போனஸ் தொகையை ரூ.7000 ஆக உயர்த்த கோரி இரண்டாம் கட்ட போராட்டமான தர்ணா போராட்டம் இன்று நடைபெற்றது. இப்போராட்டம், கோவை தபால்காரர் மண்டல செயலர் ஸ்ரீதர் மற்றும் கோவை நிர்வாக மண்டல செயலர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இதனை ஆர்.எம்.எஸ் மண்டல தலைவர் துவக்கி வைத்தார்.

போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. அதில்,

1.ஜி.டி.எஸ் ஊழியருக்கான ரூ.7000 போனஸ் வழங்க வேண்டும்.

2.01.10.2006, 01.01.2016 முதல் 6வது, 7வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஊழியர்களுக்கு புதிய ஊதியம் மற்றும் நிலுவை தொகையை வழங்க வேண்டும்.

3.ஜி.டி.எஸ் ஊழியர்களுக்கு தபால்காரர், எம்.டி.எஸ் விடுப்பு காலங்களில் பணியாற்றுவதற்கான புதிய ஊதியம் மற்றும் நிலுவை தொகை 01.012016 முதல் வழங்க வேண்டும்.

என்ற கோரிக்கைகள் வைத்தனர். 



இந்த தர்ணா போராட்டத்தில் திருப்பூர் மண்டல செயலர் ராஜேந்திரன், ஆர்.எம்.எஸ் மண்டல செயலர் சுந்தரவடிவேல், ஓய்வூதிய சங்க மண்டல செயலர் கருணாநிதி, ஜி.டி.எஸ் மண்டல தலைவர் மரிய அந்தோணி மற்றும் அனைத்து அஞ்சல் ஆ.எம்.எஸ், எம்.எம்.எஸ், பி.எஸ்.டி, ஜி.டி.எஸ் மற்றும் நிர்வாகப்பிரிவு ஊழியர்கள் சங்கங்கள் கலந்து கொண்டது. ஸ்ரீதரன் மற்றும் எபினேசர் காந்தி ஆகியோர் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...