ஜி.டி.எஸ் ஊழியருக்கான போனஸ் தொகையை ரூ.7000 ஆக உயர்திக் கொடுக்க வேண்டுமெனவும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அணைத்து அஞ்சல் மற்றும் நிர்வாகப்பிரிவு ஊழியர் சங்கங்கள் இணைந்து மாபெரும் மண்டல தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்.எஸ் புரம், தலைமை தபால் நிலையம் முன்னால் ஜி.டி.எஸ் ஊழியருக்கான போனஸ் தொகையை ரூ.7000 ஆக உயர்த்த கோரி இரண்டாம் கட்ட போராட்டமான தர்ணா போராட்டம் இன்று நடைபெற்றது. இப்போராட்டம், கோவை தபால்காரர் மண்டல செயலர் ஸ்ரீதர் மற்றும் கோவை நிர்வாக மண்டல செயலர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இதனை ஆர்.எம்.எஸ் மண்டல தலைவர் துவக்கி வைத்தார்.
போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. அதில்,
1.ஜி.டி.எஸ் ஊழியருக்கான ரூ.7000 போனஸ் வழங்க வேண்டும்.
2.01.10.2006, 01.01.2016 முதல் 6வது, 7வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஊழியர்களுக்கு புதிய ஊதியம் மற்றும் நிலுவை தொகையை வழங்க வேண்டும்.
3.ஜி.டி.எஸ் ஊழியர்களுக்கு தபால்காரர், எம்.டி.எஸ் விடுப்பு காலங்களில் பணியாற்றுவதற்கான புதிய ஊதியம் மற்றும் நிலுவை தொகை 01.012016 முதல் வழங்க வேண்டும்.
என்ற கோரிக்கைகள் வைத்தனர்.

இந்த தர்ணா போராட்டத்தில் திருப்பூர் மண்டல செயலர் ராஜேந்திரன், ஆர்.எம்.எஸ் மண்டல செயலர் சுந்தரவடிவேல், ஓய்வூதிய சங்க மண்டல செயலர் கருணாநிதி, ஜி.டி.எஸ் மண்டல தலைவர் மரிய அந்தோணி மற்றும் அனைத்து அஞ்சல் ஆ.எம்.எஸ், எம்.எம்.எஸ், பி.எஸ்.டி, ஜி.டி.எஸ் மற்றும் நிர்வாகப்பிரிவு ஊழியர்கள் சங்கங்கள் கலந்து கொண்டது. ஸ்ரீதரன் மற்றும் எபினேசர் காந்தி ஆகியோர் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர்.

ஆர்.எஸ் புரம், தலைமை தபால் நிலையம் முன்னால் ஜி.டி.எஸ் ஊழியருக்கான போனஸ் தொகையை ரூ.7000 ஆக உயர்த்த கோரி இரண்டாம் கட்ட போராட்டமான தர்ணா போராட்டம் இன்று நடைபெற்றது. இப்போராட்டம், கோவை தபால்காரர் மண்டல செயலர் ஸ்ரீதர் மற்றும் கோவை நிர்வாக மண்டல செயலர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இதனை ஆர்.எம்.எஸ் மண்டல தலைவர் துவக்கி வைத்தார்.
போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. அதில்,
1.ஜி.டி.எஸ் ஊழியருக்கான ரூ.7000 போனஸ் வழங்க வேண்டும்.
2.01.10.2006, 01.01.2016 முதல் 6வது, 7வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஊழியர்களுக்கு புதிய ஊதியம் மற்றும் நிலுவை தொகையை வழங்க வேண்டும்.
3.ஜி.டி.எஸ் ஊழியர்களுக்கு தபால்காரர், எம்.டி.எஸ் விடுப்பு காலங்களில் பணியாற்றுவதற்கான புதிய ஊதியம் மற்றும் நிலுவை தொகை 01.012016 முதல் வழங்க வேண்டும்.
என்ற கோரிக்கைகள் வைத்தனர்.

இந்த தர்ணா போராட்டத்தில் திருப்பூர் மண்டல செயலர் ராஜேந்திரன், ஆர்.எம்.எஸ் மண்டல செயலர் சுந்தரவடிவேல், ஓய்வூதிய சங்க மண்டல செயலர் கருணாநிதி, ஜி.டி.எஸ் மண்டல தலைவர் மரிய அந்தோணி மற்றும் அனைத்து அஞ்சல் ஆ.எம்.எஸ், எம்.எம்.எஸ், பி.எஸ்.டி, ஜி.டி.எஸ் மற்றும் நிர்வாகப்பிரிவு ஊழியர்கள் சங்கங்கள் கலந்து கொண்டது. ஸ்ரீதரன் மற்றும் எபினேசர் காந்தி ஆகியோர் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர்.