கோவை பீளமேடு அருகே உள்ள அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமா ரெட்டி. இவரது மகன் மோகன் ரெட்டி (17). இவருக்கு கடந்த சில நாட்களாக மஞ்சக்காமாலை நோய் இருந்துள்ளது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், மஞ்சக்காமாலை நோயால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மோகன் ரெட்டி புதனன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம்பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைத்தொடர்ந்து இவரது தாய் ரீமாரெட்டி பீளமேடு காவல் துறைக்கு தகவல் அளித்ததின் அடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பறி கோவை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.